கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
இப்கார், எலிவா, எல்பெலேத்,
நோகா, நெப்பேக், யப்பியா,
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
| And he brought back | וַיָּ֕שֶׁב | wayyāšeb | va-YA-shev |
| אֵ֖ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the goods, | הָֽרְכֻ֑שׁ | hārĕkuš | ha-reh-HOOSH |
| and also | וְגַם֩ | wĕgam | veh-ɡAHM |
| brought again | אֶת | ʾet | et |
| his brother | ל֨וֹט | lôṭ | lote |
| אָחִ֤יו | ʾāḥîw | ah-HEEOO | |
| Lot, | וּרְכֻשׁוֹ֙ | ûrĕkušô | oo-reh-hoo-SHOH |
| and his goods, | הֵשִׁ֔יב | hēšîb | hay-SHEEV |
| and | וְגַ֥ם | wĕgam | veh-ɡAHM |
| the women | אֶת | ʾet | et |
| also, | הַנָּשִׁ֖ים | hannāšîm | ha-na-SHEEM |
| and the people. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |