என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
| And every | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
| plant | שִׂ֣יחַ | śîaḥ | SEE-ak |
| of the field | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֚רֶם | ṭerem | TEH-rem |
| it was | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| in the earth, | בָאָ֔רֶץ | bāʾāreṣ | va-AH-rets |
| and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| herb | עֵ֥שֶׂב | ʿēśeb | A-sev |
| of the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֣רֶם | ṭerem | TEH-rem |
| it grew: | יִצְמָ֑ח | yiṣmāḥ | yeets-MAHK |
| for | כִּי֩ | kiy | kee |
| the Lord | לֹ֨א | lōʾ | loh |
| God | הִמְטִ֜יר | himṭîr | heem-TEER |
| had not | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| caused it to rain | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| upon | עַל | ʿal | al |
| the earth, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and there was not | וְאָדָ֣ם | wĕʾādām | veh-ah-DAHM |
| a man | אַ֔יִן | ʾayin | AH-yeen |
| to till | לַֽעֲבֹ֖ד | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground. | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |