இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.
அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
| And Arphaxad | וַיְחִ֣י | wayḥî | vai-HEE |
| lived | אַרְפַּכְשַׁ֗ד | ʾarpakšad | ar-pahk-SHAHD |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| he begat | הֽוֹלִיד֣וֹ | hôlîdô | hoh-lee-DOH |
| אֶת | ʾet | et | |
| Salah | שֶׁ֔לַח | šelaḥ | SHEH-lahk |
| four | שָׁלֹ֣שׁ | šālōš | sha-LOHSH |
| hundred | שָׁנִ֔ים | šānîm | sha-NEEM |
| וְאַרְבַּ֥ע | wĕʾarbaʿ | veh-ar-BA | |
| and three | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
| years, | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
| and begat | וַיּ֥וֹלֶד | wayyôled | VA-yoh-led |
| sons | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| and daughters. | וּבָנֽוֹת׃ | ûbānôt | oo-va-NOTE |