அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.
தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
| But God | וַיָּבֹ֧א | wayyābōʾ | va-ya-VOH |
| came | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to | אֶל | ʾel | el |
| Abimelech | אֲבִימֶ֖לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| in a dream | בַּֽחֲל֣וֹם | baḥălôm | ba-huh-LOME |
| by night, | הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| to him, Behold, | ל֗וֹ | lô | loh |
| thou art but a dead man, | הִנְּךָ֥ | hinnĕkā | hee-neh-HA |
| for | מֵת֙ | mēt | mate |
| the woman | עַל | ʿal | al |
| which | הָֽאִשָּׁ֣ה | hāʾiššâ | ha-ee-SHA |
| thou hast taken; | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| for she | לָקַ֔חְתָּ | lāqaḥtā | la-KAHK-ta |
| is a man's | וְהִ֖וא | wĕhiw | veh-HEEV |
| wife. | בְּעֻ֥לַת | bĕʿulat | beh-OO-laht |
| בָּֽעַל׃ | bāʿal | BA-al |