அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
| And Abraham | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אַבְרָהָ֗ם | ʾabrāhām | av-ra-HAHM |
| unto | אֶל | ʾel | el |
| his eldest | עַבְדּוֹ֙ | ʿabdô | av-DOH |
| servant | זְקַ֣ן | zĕqan | zeh-KAHN |
| of his house, | בֵּית֔וֹ | bêtô | bay-TOH |
| that ruled over | הַמֹּשֵׁ֖ל | hammōšēl | ha-moh-SHALE |
| all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he had, Put, | ל֑וֹ | lô | loh |
| I pray thee, | שִֽׂים | śîm | seem |
| thy hand | נָ֥א | nāʾ | na |
| under | יָֽדְךָ֖ | yādĕkā | ya-deh-HA |
| my thigh: | תַּ֥חַת | taḥat | TA-haht |
| יְרֵכִֽי׃ | yĕrēkî | yeh-ray-HEE |