Context verses 1-thessalonians 5:18
1 Thessalonians 5:2

இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

אֶת
1 Thessalonians 5:3

சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

אֶת
1 Thessalonians 5:4

சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.

אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:5

நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:6

ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.

וַֽיְחִי, וּמְאַ֣ת, שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:7

தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.

וַֽיְחִי, אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:8

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:9

தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:10

நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:11

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:12

அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, எங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:13

அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:14

மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:15

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:16

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:17

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:19

ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

וַֽיְחִי, אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:20

தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:21

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:22

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

אֶת, אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:24

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

אֶת
1 Thessalonians 5:25

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

שָׁנָ֖ה, וּמְאַ֣ת, שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Thessalonians 5:26

சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

אֶת, שָׁנָ֑ה
1 Thessalonians 5:27

இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

שָׁנָ֑ה
1 Thessalonians 5:28

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

וַֽיְחִי, שְׁתַּ֧יִם, שָׁנָ֖ה, וּמְאַ֣ת, שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד
lived
And
וַֽיְחִיwayḥîVA-hee
Jared
יֶ֕רֶדyeredYEH-red
two
and
שְׁתַּ֧יִםšĕttayimsheh-TA-yeem
sixty
וְשִׁשִּׁ֛יםwĕšiššîmveh-shee-SHEEM

שָׁנָ֖הšānâsha-NA
hundred
an
וּמְאַ֣תûmĕʾatoo-meh-AT
years,
שָׁנָ֑הšānâsha-NA
begat
he
and
וַיּ֖וֹלֶדwayyôledVA-yoh-led

אֶתʾetet
Enoch:
חֲנֽוֹךְ׃ḥănôkhuh-NOKE