யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.
யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.
கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,
இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
| And God | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| heard | אֱלֹהִים֮ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| the voice | ק֣וֹל | qôl | kole |
| of the lad; | הַנַּעַר֒ | hannaʿar | ha-na-AR |
| and the angel | וַיִּקְרָא֩ | wayyiqrāʾ | va-yeek-RA |
| of God | מַלְאַ֨ךְ | malʾak | mahl-AK |
| called | אֱלֹהִ֤ים׀ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to | אֶל | ʾel | el |
| Hagar | הָגָר֙ | hāgār | ha-ɡAHR |
| out of | מִן | min | meen |
| heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and said | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto her, What | לָ֖הּ | lāh | la |
| aileth thee, Hagar? | מַה | ma | ma |
| fear | לָּ֣ךְ | lāk | lahk |
| not; | הָגָ֑ר | hāgār | ha-ɡAHR |
| for | אַל | ʾal | al |
| God | תִּ֣ירְאִ֔י | tîrĕʾî | TEE-reh-EE |
| hath heard | כִּֽי | kî | kee |
| שָׁמַ֧ע | šāmaʿ | sha-MA | |
| the voice | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of the lad | אֶל | ʾel | el |
| where | ק֥וֹל | qôl | kole |
| הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar | |
| he | בַּֽאֲשֶׁ֥ר | baʾăšer | ba-uh-SHER |
| is. | הוּא | hûʾ | hoo |
| שָֽׁם׃ | šām | shahm |