அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள்.
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமைபாராட்டிக் கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.
அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| in the days | בִּימֵי֙ | bîmēy | bee-MAY |
| of Amraphel | אַמְרָפֶ֣ל | ʾamrāpel | am-ra-FEL |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Shinar, | שִׁנְעָ֔ר | šinʿār | sheen-AR |
| Arioch | אַרְי֖וֹךְ | ʾaryôk | ar-YOKE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Ellasar, | אֶלָּסָ֑ר | ʾellāsār | eh-la-SAHR |
| Chedorlaomer | כְּדָרְלָעֹ֙מֶר֙ | kĕdorlāʿōmer | keh-dore-la-OH-MER |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Elam, | עֵילָ֔ם | ʿêlām | ay-LAHM |
| and Tidal | וְתִדְעָ֖ל | wĕtidʿāl | veh-teed-AL |
| king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of nations; | גּוֹיִֽם׃ | gôyim | ɡoh-YEEM |