யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.
ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:
நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,
தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.
ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.
நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
| And they came | וַיָּבֹ֗אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| to | אֶֽל | ʾel | el |
| the place | הַמָּקוֹם֮ | hammāqôm | ha-ma-KOME |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| God | אָֽמַר | ʾāmar | AH-mahr |
| had told | ל֣וֹ | lô | loh |
| him of; and Abraham | הָֽאֱלֹהִים֒ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| built | וַיִּ֨בֶן | wayyiben | va-YEE-ven |
| שָׁ֤ם | šām | shahm | |
| an altar | אַבְרָהָם֙ | ʾabrāhām | av-ra-HAHM |
| there, | אֶת | ʾet | et |
| and laid the wood | הַמִּזְבֵּ֔חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| in order, | וַֽיַּעֲרֹ֖ךְ | wayyaʿărōk | va-ya-uh-ROKE |
| and bound | אֶת | ʾet | et |
| הָֽעֵצִ֑ים | hāʿēṣîm | ha-ay-TSEEM | |
| Isaac | וַֽיַּעֲקֹד֙ | wayyaʿăqōd | va-ya-uh-KODE |
| his son, | אֶת | ʾet | et |
| and laid | יִצְחָ֣ק | yiṣḥāq | yeets-HAHK |
| him on | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| the altar | וַיָּ֤שֶׂם | wayyāśem | va-YA-sem |
| upon | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| the wood. | עַל | ʿal | al |
| הַמִּזְבֵּ֔חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak | |
| מִמַּ֖עַל | mimmaʿal | mee-MA-al | |
| לָֽעֵצִֽים׃ | lāʿēṣîm | LA-ay-TSEEM |