அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,
கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
| And these | וְאֵ֗לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the years | שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY |
| of the life | חַיֵּ֣י | ḥayyê | ha-YAY |
| of Ishmael, | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| an hundred | מְאַ֥ת | mĕʾat | meh-AT |
| שָׁנָ֛ה | šānâ | sha-NA | |
| and thirty | וּשְׁלֹשִׁ֥ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
| שָׁנָ֖ה | šānâ | sha-NA | |
| and seven | וְשֶׁ֣בַע | wĕšebaʿ | veh-SHEH-va |
| years: | שָׁנִ֑ים | šānîm | sha-NEEM |
| and he gave up the ghost | וַיִּגְוַ֣ע | wayyigwaʿ | va-yeeɡ-VA |
| and died; | וַיָּ֔מָת | wayyāmot | va-YA-mote |
| and was gathered | וַיֵּאָ֖סֶף | wayyēʾāsep | va-yay-AH-sef |
| unto | אֶל | ʾel | el |
| his people. | עַמָּֽיו׃ | ʿammāyw | ah-MAIV |