இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான்.
ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம்போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.
| And, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| came unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| This | לֹ֥א | lōʾ | loh |
| shall not | יִֽירָשְׁךָ֖ | yîroškā | yee-rohsh-HA |
| be thine heir; | זֶ֑ה | ze | zeh |
| but | כִּי | kî | kee |
| אִם֙ | ʾim | eem | |
| he that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| shall come forth | יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY |
| out of thine own bowels | מִמֵּעֶ֔יךָ | mimmēʿêkā | mee-may-A-ha |
| shall be thine heir. | ה֖וּא | hûʾ | hoo |
| יִֽירָשֶֽׁךָ׃ | yîrāšekā | YEE-ra-SHEH-ha |