ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
| And the angel | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of the Lord | לָהּ֙ | lāh | la |
| said | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| unto her, Behold, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thou art with child, | הִנָּ֥ךְ | hinnāk | hee-NAHK |
| and shalt bear | הָרָ֖ה | hārâ | ha-RA |
| a son, | וְיֹלַ֣דְתְּ | wĕyōladĕt | veh-yoh-LA-det |
| and shalt call | בֵּ֑ן | bēn | bane |
| his name | וְקָרָ֤את | wĕqārāt | veh-ka-RAHT |
| Ishmael; | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
| because | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the Lord | כִּֽי | kî | kee |
| hath heard | שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| thy affliction. | אֶל | ʾel | el |
| עָנְיֵֽךְ׃ | ʿonyēk | one-YAKE |