இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.
அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
| And they were | וַיִּֽהְי֤וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| both | שְׁנֵיהֶם֙ | šĕnêhem | sheh-nay-HEM |
| naked, | עֲרוּמִּ֔ים | ʿărûmmîm | uh-roo-MEEM |
| the man | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| and his wife, | וְאִשְׁתּ֑וֹ | wĕʾištô | veh-eesh-TOH |
| and were not | וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH |
| ashamed. | יִתְבֹּשָֽׁשׁוּ׃ | yitbōšāšû | yeet-boh-sha-SHOO |