தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டுமென்று இருந்தான்.
செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
| And God | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| unto | אֶל | ʾel | el |
| Abraham, | אַבְרָהָ֗ם | ʾabrāhām | av-ra-HAHM |
| Let it not | אַל | ʾal | al |
| be grievous | יֵרַ֤ע | yēraʿ | yay-RA |
| in thy sight | בְּעֵינֶ֙יךָ֙ | bĕʿênêkā | beh-ay-NAY-HA |
| because of | עַל | ʿal | al |
| the lad, | הַנַּ֣עַר | hannaʿar | ha-NA-ar |
| and because of | וְעַל | wĕʿal | veh-AL |
| thy bondwoman; | אֲמָתֶ֔ךָ | ʾămātekā | uh-ma-TEH-ha |
| in all | כֹּל֩ | kōl | kole |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Sarah | תֹּאמַ֥ר | tōʾmar | toh-MAHR |
| hath said | אֵלֶ֛יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| unto | שָׂרָ֖ה | śārâ | sa-RA |
| thee, hearken | שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA |
| unto her voice; | בְּקֹלָ֑הּ | bĕqōlāh | beh-koh-LA |
| for | כִּ֣י | kî | kee |
| in Isaac | בְיִצְחָ֔ק | bĕyiṣḥāq | veh-yeets-HAHK |
| shall thy seed | יִקָּרֵ֥א | yiqqārēʾ | yee-ka-RAY |
| be called. | לְךָ֖ | lĕkā | leh-HA |
| זָֽרַע׃ | zāraʿ | ZA-ra |