கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.
ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.
| And Abraham | וַיַּשְׁכֵּ֨ם | wayyaškēm | va-yahsh-KAME |
| rose up early | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| in the morning, | בַּבֹּ֗קֶר | babbōqer | ba-BOH-ker |
| and saddled | וַֽיַּחֲבֹשׁ֙ | wayyaḥăbōš | va-ya-huh-VOHSH |
| אֶת | ʾet | et | |
| his ass, | חֲמֹר֔וֹ | ḥămōrô | huh-moh-ROH |
| and took | וַיִּקַּ֞ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| אֶת | ʾet | et | |
| two | שְׁנֵ֤י | šĕnê | sheh-NAY |
| of his young men | נְעָרָיו֙ | nĕʿārāyw | neh-ah-rav |
| with | אִתּ֔וֹ | ʾittô | EE-toh |
| him, and Isaac | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| his son, | יִצְחָ֣ק | yiṣḥāq | yeets-HAHK |
| and clave | בְּנ֑וֹ | bĕnô | beh-NOH |
| the wood | וַיְבַקַּע֙ | waybaqqaʿ | vai-va-KA |
| for the burnt offering, | עֲצֵ֣י | ʿăṣê | uh-TSAY |
| and rose up, | עֹלָ֔ה | ʿōlâ | oh-LA |
| and went | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| unto | וַיֵּ֔לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| the place | אֶל | ʾel | el |
| of which | הַמָּק֖וֹם | hammāqôm | ha-ma-KOME |
| God | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had told | אָֽמַר | ʾāmar | AH-mahr |
| him. | ל֥וֹ | lô | loh |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |