அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.
அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச்சொன்னது என்னவென்றால்:
அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்.
அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்,
அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.
அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
| I considered | מִשְׂתַּכַּ֨ל | miśtakkal | mees-ta-KAHL |
| הֲוֵ֜ית | hăwêt | huh-VATE | |
| the horns, | בְּקַרְנַיָּ֗א | bĕqarnayyāʾ | beh-kahr-na-YA |
| and, behold, | וַ֠אֲלוּ | waʾălû | VA-uh-loo |
| there came up | קֶ֣רֶן | qeren | KEH-ren |
| among | אָחֳרִ֤י | ʾāḥŏrî | ah-hoh-REE |
| them another | זְעֵירָה֙ | zĕʿêrāh | zeh-ay-RA |
| little | סִלְקָ֣ת | silqāt | seel-KAHT |
| horn, | בֵּֽינֵיהֵ֔ון | bênêhēwn | bay-nay-HAVE-n |
| before | וּתְלָ֗ת | ûtĕlāt | oo-teh-LAHT |
| מִן | min | meen | |
| whom there were three | קַרְנַיָּא֙ | qarnayyāʾ | kahr-na-YA |
| of | קַדְמָ֣יָתָ֔א | qadmāyātāʾ | kahd-MA-ya-TA |
| the first | אֶתְעֲקַ֖רָו | ʾetʿăqarow | et-uh-KA-rove |
| horns | מִן | min | meen |
| plucked up by the roots: | קֳדָמַ֑יהּ | qŏdāmayh | koh-da-MAI |
| and, behold, | וַאֲל֨וּ | waʾălû | va-uh-LOO |
| in this | עַיְנִ֜ין | ʿaynîn | ai-NEEN |
| horn | כְּעַיְנֵ֤י | kĕʿaynê | keh-ai-NAY |
| were eyes | אֲנָשָׁא֙ | ʾănāšāʾ | uh-na-SHA |
| like the eyes | בְּקַרְנָא | bĕqarnāʾ | beh-kahr-NA |
| of man, | דָ֔א | dāʾ | da |
| and a mouth | וּפֻ֖ם | ûpum | oo-FOOM |
| speaking | מְמַלִּ֥ל | mĕmallil | meh-ma-LEEL |
| great things. | רַבְרְבָֽן׃ | rabrĕbān | rahv-reh-VAHN |