இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக்காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,
அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
| Ye shall not | לֹֽא | lōʾ | loh |
| respect | תַכִּ֨ירוּ | takkîrû | ta-KEE-roo |
| persons | פָנִ֜ים | pānîm | fa-NEEM |
| in judgment; | בַּמִּשְׁפָּ֗ט | bammišpāṭ | ba-meesh-PAHT |
| but ye shall hear | כַּקָּטֹ֤ן | kaqqāṭōn | ka-ka-TONE |
| the small | כַּגָּדֹל֙ | kaggādōl | ka-ɡa-DOLE |
| as well as the great; | תִּשְׁמָע֔וּן | tišmāʿûn | teesh-ma-OON |
| ye shall not | לֹ֤א | lōʾ | loh |
| be afraid | תָג֙וּרוּ֙ | tāgûrû | ta-ɡOO-ROO |
| of the face | מִפְּנֵי | mippĕnê | mee-peh-NAY |
| of man; | אִ֔ישׁ | ʾîš | eesh |
| for | כִּ֥י | kî | kee |
| the judgment | הַמִּשְׁפָּ֖ט | hammišpāṭ | ha-meesh-PAHT |
| is God's: | לֵֽאלֹהִ֣ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| and the cause | ה֑וּא | hûʾ | hoo |
| that | וְהַדָּבָר֙ | wĕhaddābār | veh-ha-da-VAHR |
| is too hard | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| for | יִקְשֶׁ֣ה | yiqše | yeek-SHEH |
| you, bring | מִכֶּ֔ם | mikkem | mee-KEM |
| it unto | תַּקְרִב֥וּן | taqribûn | tahk-ree-VOON |
| me, and I will hear | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| it. | וּשְׁמַעְתִּֽיו׃ | ûšĕmaʿtîw | oo-sheh-ma-TEEV |