அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.
கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.
உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.
| And now, | וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA |
| Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| what | מָ֚ה | mâ | ma |
| doth the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| require | שֹׁאֵ֖ל | šōʾēl | shoh-ALE |
| of | מֵֽעִמָּ֑ךְ | mēʿimmāk | may-ee-MAHK |
| thee, but | כִּ֣י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| to fear | לְ֠יִרְאָה | lĕyirʾâ | LEH-yeer-ah |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| to walk | לָלֶ֤כֶת | lāleket | la-LEH-het |
| in all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| his ways, | דְּרָכָיו֙ | dĕrākāyw | deh-ra-hav |
| and to love | וּלְאַֽהֲבָ֣ה | ûlĕʾahăbâ | oo-leh-ah-huh-VA |
| him, and to serve | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| וְלַֽעֲבֹד֙ | wĕlaʿăbōd | veh-la-uh-VODE | |
| the Lord | אֶת | ʾet | et |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| with all | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thy heart | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| and with all | לְבָֽבְךָ֖ | lĕbābĕkā | leh-va-veh-HA |
| thy soul, | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |