நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,
அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,
ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,
இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,
உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.
இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.
ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.
| And a curse, | וְהַקְּלָלָ֗ה | wĕhaqqĕlālâ | veh-ha-keh-la-LA |
| if | אִם | ʾim | eem |
| ye will not | לֹ֤א | lōʾ | loh |
| obey | תִשְׁמְעוּ֙ | tišmĕʿû | teesh-meh-OO |
| אֶל | ʾel | el | |
| the commandments | מִצְוֹת֙ | miṣwōt | mee-ts-OTE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| your God, | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| but turn aside | וְסַרְתֶּ֣ם | wĕsartem | veh-sahr-TEM |
| out of | מִן | min | meen |
| the way | הַדֶּ֔רֶךְ | hadderek | ha-DEH-rek |
| which | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוֶּ֥ה | mĕṣawwe | meh-tsa-WEH |
| you this day, | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| to go | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
| after | לָלֶ֗כֶת | lāleket | la-LEH-het |
| other | אַֽחֲרֵ֛י | ʾaḥărê | ah-huh-RAY |
| gods, | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| which | אֲחֵרִ֖ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| ye have not | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| known. | לֹֽא | lōʾ | loh |
| יְדַעְתֶּֽם׃ | yĕdaʿtem | yeh-da-TEM |