உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.
உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,
உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
| But | כִּ֡י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| thou must eat | לִפְנֵי֩ | lipnēy | leef-NAY |
| them before | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| the Lord | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thy God | תֹּֽאכְלֶ֗נּוּ | tōʾkĕlennû | toh-heh-LEH-noo |
| in the place | בַּמָּקוֹם֙ | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יִבְחַ֜ר | yibḥar | yeev-HAHR |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| shall choose, | אֱלֹהֶיךָ֮ | ʾĕlōhêkā | ay-loh-hay-HA |
| thou, | בּוֹ֒ | bô | boh |
| and thy son, | אַתָּ֨ה | ʾattâ | ah-TA |
| and thy daughter, | וּבִנְךָ֤ | ûbinkā | oo-veen-HA |
| and thy manservant, | וּבִתֶּ֙ךָ֙ | ûbittekā | oo-vee-TEH-HA |
| and thy maidservant, | וְעַבְדְּךָ֣ | wĕʿabdĕkā | veh-av-deh-HA |
| and the Levite | וַֽאֲמָתֶ֔ךָ | waʾămātekā | va-uh-ma-TEH-ha |
| that | וְהַלֵּוִ֖י | wĕhallēwî | veh-ha-lay-VEE |
| is within thy gates: | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| and thou shalt rejoice | בִּשְׁעָרֶ֑יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
| before | וְשָֽׂמַחְתָּ֗ | wĕśāmaḥtā | veh-sa-mahk-TA |
| the Lord | לִפְנֵי֙ | lipnēy | leef-NAY |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| in all | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| that thou puttest | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| thine hands | מִשְׁלַ֥ח | mišlaḥ | meesh-LAHK |
| unto. | יָדֶֽךָ׃ | yādekā | ya-DEH-ha |