உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:
நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்னுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும் போதும்,
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
| Observe | שְׁמֹ֣ר | šĕmōr | sheh-MORE |
| and hear | וְשָֽׁמַעְתָּ֗ | wĕšāmaʿtā | veh-sha-ma-TA |
| אֵ֚ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוֶּ֑ךָּ | mĕṣawwekkā | meh-tsa-WEH-ka |
| thee, that | לְמַעַן֩ | lĕmaʿan | leh-ma-AN |
| it may go well | יִיטַ֨ב | yîṭab | yee-TAHV |
| with thee, and with thy children | לְךָ֜ | lĕkā | leh-HA |
| after | וּלְבָנֶ֤יךָ | ûlĕbānêkā | oo-leh-va-NAY-ha |
| thee for | אַֽחֲרֶ֙יךָ֙ | ʾaḥărêkā | ah-huh-RAY-HA |
| ever, | עַד | ʿad | ad |
| when | עוֹלָ֔ם | ʿôlām | oh-LAHM |
| thou doest | כִּ֤י | kî | kee |
| that which is good | תַֽעֲשֶׂה֙ | taʿăśeh | ta-uh-SEH |
| and right | הַטּ֣וֹב | haṭṭôb | HA-tove |
| in the sight | וְהַיָּשָׁ֔ר | wĕhayyāšār | veh-ha-ya-SHAHR |
| of the Lord | בְּעֵינֵ֖י | bĕʿênê | beh-ay-NAY |
| thy God. | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |