அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.
சகலவித காகங்களும்,
ஆந்தையும், கோட்டானும், நாரையும்,
சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,
அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,
அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
| And thou shalt eat | וְאָֽכַלְתָּ֞ | wĕʾākaltā | veh-ah-hahl-TA |
| before | לִפְנֵ֣י׀ | lipnê | leef-NAY |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֗יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| in the place | בַּמָּק֣וֹם | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he shall choose | יִבְחַר֮ | yibḥar | yeev-HAHR |
| to place | לְשַׁכֵּ֣ן | lĕšakkēn | leh-sha-KANE |
| his name | שְׁמ֣וֹ | šĕmô | sheh-MOH |
| there, | שָׁם֒ | šām | shahm |
| the tithe | מַעְשַׂ֤ר | maʿśar | ma-SAHR |
| of thy corn, | דְּגָֽנְךָ֙ | dĕgānĕkā | deh-ɡa-neh-HA |
| of thy wine, | תִּֽירֹשְׁךָ֣ | tîrōšĕkā | tee-roh-sheh-HA |
| and of thine oil, | וְיִצְהָרֶ֔ךָ | wĕyiṣhārekā | veh-yeets-ha-REH-ha |
| and the firstlings | וּבְכֹרֹ֥ת | ûbĕkōrōt | oo-veh-hoh-ROTE |
| of thy herds | בְּקָֽרְךָ֖ | bĕqārĕkā | beh-ka-reh-HA |
| and of thy flocks; | וְצֹאנֶ֑ךָ | wĕṣōʾnekā | veh-tsoh-NEH-ha |
| that | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| thou mayest learn | תִּלְמַ֗ד | tilmad | teel-MAHD |
| to fear | לְיִרְאָ֛ה | lĕyirʾâ | leh-yeer-AH |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| always. | כָּל | kāl | kahl |
| הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |