ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.
| Three | שָׁל֣וֹשׁ | šālôš | sha-LOHSH |
| times | פְּעָמִ֣ים׀ | pĕʿāmîm | peh-ah-MEEM |
| in a year | בַּשָּׁנָ֡ה | baššānâ | ba-sha-NA |
| shall all | יֵֽרָאֶ֨ה | yērāʾe | yay-ra-EH |
| thy males | כָל | kāl | hahl |
| appear | זְכֽוּרְךָ֜ | zĕkûrĕkā | zeh-hoo-reh-HA |
| אֶת | ʾet | et | |
| before | פְּנֵ֣י׀ | pĕnê | peh-NAY |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֗יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| in the place | בַּמָּקוֹם֙ | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he shall choose; | יִבְחָ֔ר | yibḥār | yeev-HAHR |
| in the feast | בְּחַ֧ג | bĕḥag | beh-HAHɡ |
| of unleavened bread, | הַמַּצּ֛וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
| and in the feast | וּבְחַ֥ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| of weeks, | הַשָּֽׁבֻע֖וֹת | haššābuʿôt | ha-sha-voo-OTE |
| and in the feast | וּבְחַ֣ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| of tabernacles: | הַסֻּכּ֑וֹת | hassukkôt | ha-SOO-kote |
| and they shall not | וְלֹ֧א | wĕlōʾ | veh-LOH |
| appear | יֵֽרָאֶ֛ה | yērāʾe | yay-ra-EH |
| אֶת | ʾet | et | |
| before | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| empty: | רֵיקָֽם׃ | rêqām | ray-KAHM |