லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.
இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,
அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
| According to all | כְּכֹ֨ל | kĕkōl | keh-HOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou desiredst | שָׁאַ֜לְתָּ | šāʾaltā | sha-AL-ta |
| of | מֵעִ֨ם | mēʿim | may-EEM |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA |
| in Horeb | בְּחֹרֵ֔ב | bĕḥōrēb | beh-hoh-RAVE |
| in the day | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| of the assembly, | הַקָּהָ֖ל | haqqāhāl | ha-ka-HAHL |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Let me not | לֹ֣א | lōʾ | loh |
| hear | אֹסֵ֗ף | ʾōsēp | oh-SAFE |
| again | לִשְׁמֹ֙עַ֙ | lišmōʿa | leesh-MOH-AH |
| אֶת | ʾet | et | |
| the voice | קוֹל֙ | qôl | kole |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| my God, | אֱלֹהָ֔י | ʾĕlōhāy | ay-loh-HAI |
| neither | וְאֶת | wĕʾet | veh-ET |
| let me see | הָאֵ֨שׁ | hāʾēš | ha-AYSH |
| this | הַגְּדֹלָ֥ה | haggĕdōlâ | ha-ɡeh-doh-LA |
| great | הַזֹּ֛את | hazzōt | ha-ZOTE |
| fire | לֹֽא | lōʾ | loh |
| any more, | אֶרְאֶ֥ה | ʾerʾe | er-EH |
| that I die | ע֖וֹד | ʿôd | ode |
| not. | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| אָמֽוּת׃ | ʾāmût | ah-MOOT |