உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,
அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.
இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,
நீயும் லேவியனும், உன்னிடத்திலிருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
| I have not | לֹֽא | lōʾ | loh |
| eaten | אָכַ֨לְתִּי | ʾākaltî | ah-HAHL-tee |
| thereof | בְאֹנִ֜י | bĕʾōnî | veh-oh-NEE |
| in my mourning, | מִמֶּ֗נּוּ | mimmennû | mee-MEH-noo |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| have I taken away | בִעַ֤רְתִּי | biʿartî | vee-AR-tee |
| ought thereof | מִמֶּ֙נּוּ֙ | mimmennû | mee-MEH-NOO |
| for any unclean | בְּטָמֵ֔א | bĕṭāmēʾ | beh-ta-MAY |
| use, nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| given | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| ought thereof | מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo |
| for the dead: | לְמֵ֑ת | lĕmēt | leh-MATE |
| but I have hearkened | שָׁמַ֗עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| to the voice | בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| my God, | אֱלֹהָ֔י | ʾĕlōhāy | ay-loh-HAI |
| and have done | עָשִׂ֕יתִי | ʿāśîtî | ah-SEE-tee |
| according to all | כְּכֹ֖ל | kĕkōl | keh-HOLE |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou hast commanded | צִוִּיתָֽנִי׃ | ṣiwwîtānî | tsee-wee-TA-nee |