அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,
எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,
நீயும் லேவியனும், உன்னிடத்திலிருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.
தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.
கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
| Look down | הַשְׁקִיפָה֩ | hašqîpāh | hahsh-kee-FA |
| from thy holy | מִמְּע֨וֹן | mimmĕʿôn | mee-meh-ONE |
| habitation, | קָדְשְׁךָ֜ | qodšĕkā | kode-sheh-HA |
| from | מִן | min | meen |
| heaven, | הַשָּׁמַ֗יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and bless | וּבָרֵ֤ךְ | ûbārēk | oo-va-RAKE |
| אֶֽת | ʾet | et | |
| thy people | עַמְּךָ֙ | ʿammĕkā | ah-meh-HA |
| אֶת | ʾet | et | |
| Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and the land | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| which | הָֽאֲדָמָ֔ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| thou hast given | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| us, as | נָתַ֖תָּה | nātattâ | na-TA-ta |
| thou swarest | לָ֑נוּ | lānû | LA-noo |
| unto our fathers, | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| a land | נִשְׁבַּ֙עְתָּ֙ | nišbaʿtā | neesh-BA-TA |
| that floweth | לַֽאֲבֹתֵ֔ינוּ | laʾăbōtênû | la-uh-voh-TAY-noo |
| with milk | אֶ֛רֶץ | ʾereṣ | EH-rets |
| and honey. | זָבַ֥ת | zābat | za-VAHT |
| חָלָ֖ב | ḥālāb | ha-LAHV | |
| וּדְבָֽשׁ׃ | ûdĕbāš | oo-deh-VAHSH |