உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,
அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.
எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,
எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,
தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,
நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
| That thou shalt take | וְלָֽקַחְתָּ֞ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| of the first | מֵֽרֵאשִׁ֣ית׀ | mērēʾšît | may-ray-SHEET |
| of all | כָּל | kāl | kahl |
| the fruit | פְּרִ֣י | pĕrî | peh-REE |
| of the earth, | הָֽאֲדָמָ֗ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| thou shalt bring | תָּבִ֧יא | tābîʾ | ta-VEE |
| of thy land | מֵֽאַרְצְךָ֛ | mēʾarṣĕkā | may-ar-tseh-HA |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| giveth | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| thee, and shalt put | לָ֖ךְ | lāk | lahk |
| it in a basket, | וְשַׂמְתָּ֣ | wĕśamtā | veh-sahm-TA |
| and shalt go | בַטֶּ֑נֶא | baṭṭeneʾ | va-TEH-neh |
| unto | וְהָֽלַכְתָּ֙ | wĕhālaktā | veh-ha-lahk-TA |
| the place | אֶל | ʾel | el |
| which | הַמָּק֔וֹם | hammāqôm | ha-ma-KOME |
| the Lord | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| thy God | יִבְחַר֙ | yibḥar | yeev-HAHR |
| shall choose | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| to place | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| his name | לְשַׁכֵּ֥ן | lĕšakkēn | leh-sha-KANE |
| there. | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| שָֽׁם׃ | šām | shahm |