பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,
பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
| Thou shalt build | אֲבָנִ֤ים | ʾăbānîm | uh-va-NEEM |
| שְׁלֵמוֹת֙ | šĕlēmôt | sheh-lay-MOTE | |
| the altar | תִּבְנֶ֔ה | tibne | teev-NEH |
| of the Lord | אֶת | ʾet | et |
| thy God | מִזְבַּ֖ח | mizbaḥ | meez-BAHK |
| of whole | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| stones: | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and thou shalt offer | וְהַֽעֲלִ֤יתָ | wĕhaʿălîtā | veh-ha-uh-LEE-ta |
| burnt offerings | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
| thereon | עוֹלֹ֔ת | ʿôlōt | oh-LOTE |
| unto the Lord | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| thy God: | אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |