கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
| And it shall come to pass, | וְ֠הָיָה | wĕhāyâ | VEH-ha-ya |
| that as | כַּֽאֲשֶׁר | kaʾăšer | KA-uh-sher |
| the Lord | שָׂ֨שׂ | śāś | sahs |
| rejoiced | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| over | עֲלֵיכֶ֗ם | ʿălêkem | uh-lay-HEM |
| you to do you good, | לְהֵיטִ֣יב | lĕhêṭîb | leh-hay-TEEV |
| אֶתְכֶם֮ | ʾetkem | et-HEM | |
| and to multiply | וּלְהַרְבּ֣וֹת | ûlĕharbôt | oo-leh-hahr-BOTE |
| you; so | אֶתְכֶם֒ | ʾetkem | et-HEM |
| the Lord | כֵּ֣ן | kēn | kane |
| will rejoice | יָשִׂ֤ישׂ | yāśîś | ya-SEES |
| over | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| you to destroy | עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM |
| you, and to bring you to nought; | לְהַֽאֲבִ֥יד | lĕhaʾăbîd | leh-ha-uh-VEED |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| and ye shall be plucked | וּלְהַשְׁמִ֣יד | ûlĕhašmîd | oo-leh-hahsh-MEED |
| from off | אֶתְכֶ֑ם | ʾetkem | et-HEM |
| the land | וְנִסַּחְתֶּם֙ | wĕnissaḥtem | veh-nee-sahk-TEM |
| whither | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| הָֽאֲדָמָ֔ה | hāʾădāmâ | ha-uh-da-MA | |
| thou | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| goest | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| to possess | בָא | bāʾ | va |
| it. | שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma |
| לְרִשְׁתָּֽהּ׃ | lĕrištāh | leh-reesh-TA |