உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,
உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,
இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
| In that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוְּךָ֮ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA |
| thee this day | הַיּוֹם֒ | hayyôm | ha-YOME |
| to love | לְאַֽהֲבָ֞ה | lĕʾahăbâ | leh-ah-huh-VA |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA |
| to walk | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
| in his ways, | בִּדְרָכָ֔יו | bidrākāyw | beed-ra-HAV |
| and to keep | וְלִשְׁמֹ֛ר | wĕlišmōr | veh-leesh-MORE |
| his commandments | מִצְוֹתָ֥יו | miṣwōtāyw | mee-ts-oh-TAV |
| and his statutes | וְחֻקֹּתָ֖יו | wĕḥuqqōtāyw | veh-hoo-koh-TAV |
| and his judgments, | וּמִשְׁפָּטָ֑יו | ûmišpāṭāyw | oo-meesh-pa-TAV |
| that thou mayest live | וְחָיִ֣יתָ | wĕḥāyîtā | veh-ha-YEE-ta |
| and multiply: | וְרָבִ֔יתָ | wĕrābîtā | veh-ra-VEE-ta |
| and the Lord | וּבֵֽרַכְךָ֙ | ûbērakkā | oo-vay-rahk-HA |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| shall bless | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thee in the land | בָּאָ֕רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| thou | בָא | bāʾ | va |
| goest | שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma |
| to possess | לְרִשְׁתָּֽהּ׃ | lĕrištāh | leh-reesh-TA |