உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,
இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
| That thou mayest love | לְאַֽהֲבָה֙ | lĕʾahăbāh | leh-ah-huh-VA |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and that thou mayest obey | לִשְׁמֹ֥עַ | lišmōaʿ | leesh-MOH-ah |
| his voice, | בְּקֹל֖וֹ | bĕqōlô | beh-koh-LOH |
| and that thou mayest cleave | וּלְדָבְקָה | ûlĕdobqâ | oo-leh-dove-KA |
| unto him: for | ב֑וֹ | bô | voh |
| he | כִּ֣י | kî | kee |
| is thy life, | ה֤וּא | hûʾ | hoo |
| and the length | חַיֶּ֙יךָ֙ | ḥayyêkā | ha-YAY-HA |
| of thy days: | וְאֹ֣רֶךְ | wĕʾōrek | veh-OH-rek |
| that thou mayest dwell | יָמֶ֔יךָ | yāmêkā | ya-MAY-ha |
| in | לָשֶׁ֣בֶת | lāšebet | la-SHEH-vet |
| the land | עַל | ʿal | al |
| which | הָֽאֲדָמָ֗ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| the Lord | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| sware | נִשְׁבַּ֨ע | nišbaʿ | neesh-BA |
| unto thy fathers, | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| to Abraham, | לַֽאֲבֹתֶ֛יךָ | laʾăbōtêkā | la-uh-voh-TAY-ha |
| to Isaac, | לְאַבְרָהָ֛ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| and to Jacob, | לְיִצְחָ֥ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
| to give | וּֽלְיַעֲקֹ֖ב | ûlĕyaʿăqōb | oo-leh-ya-uh-KOVE |
| them. | לָתֵ֥ת | lātēt | la-TATE |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |