நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப்போகவுமில்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
| And thou shalt remember | וְזָֽכַרְתָּ֣ | wĕzākartā | veh-za-hahr-TA |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the way | הַדֶּ֗רֶךְ | hadderek | ha-DEH-rek |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | הוֹלִֽיכְךָ֜ | hôlîkĕkā | hoh-lee-heh-HA |
| thy God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| led | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thee these | זֶ֛ה | ze | zeh |
| forty | אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| years | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| in the wilderness, | בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR |
| to | לְמַ֨עַן | lĕmaʿan | leh-MA-an |
| humble | עַנֹּֽתְךָ֜ | ʿannōtĕkā | ah-noh-teh-HA |
| thee, and to prove | לְנַסֹּֽתְךָ֗ | lĕnassōtĕkā | leh-na-soh-teh-HA |
| thee, to know | לָדַ֜עַת | lādaʿat | la-DA-at |
| אֶת | ʾet | et | |
| what | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| was in thine heart, | בִּֽלְבָבְךָ֛ | bilĕbobkā | bee-leh-vove-HA |
| whether thou wouldest keep | הֲתִשְׁמֹ֥ר | hătišmōr | huh-teesh-MORE |
| his commandments, | מִצְוֹתָ֖ו | miṣwōtāw | mee-ts-oh-TAHV |
| or | אִם | ʾim | eem |
| no. | לֹֽא׃ | lōʾ | loh |