தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.
| When | כַּאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
| thou vowest | תִּדֹּ֨ר | tiddōr | tee-DORE |
| a vow | נֶ֜דֶר | neder | NEH-der |
| unto God, | לֵֽאלֹהִ֗ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| defer | אַל | ʾal | al |
| not | תְּאַחֵר֙ | tĕʾaḥēr | teh-ah-HARE |
| to pay | לְשַׁלְּמ֔וֹ | lĕšallĕmô | leh-sha-leh-MOH |
| it; for | כִּ֛י | kî | kee |
| he hath no | אֵ֥ין | ʾên | ane |
| pleasure | חֵ֖פֶץ | ḥēpeṣ | HAY-fets |
| in fools: | בַּכְּסִילִ֑ים | bakkĕsîlîm | ba-keh-see-LEEM |
| pay | אֵ֥ת | ʾēt | ate |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| that which | תִּדֹּ֖ר | tiddōr | tee-DORE |
| thou hast vowed. | שַׁלֵּֽם׃ | šallēm | sha-LAME |