இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம், மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைத்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக் கூடாது.
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
| Now when every maid's | וּבְהַגִּ֡יעַ | ûbĕhaggîaʿ | oo-veh-ha-ɡEE-ah |
| תֹּר֩ | tōr | tore | |
| turn | נַֽעֲרָ֨ה | naʿărâ | na-uh-RA |
| was come | וְנַֽעֲרָ֜ה | wĕnaʿărâ | veh-na-uh-RA |
| to go in | לָב֣וֹא׀ | lābôʾ | la-VOH |
| to | אֶל | ʾel | el |
| king | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Ahasuerus, | אֲחַשְׁוֵר֗וֹשׁ | ʾăḥašwērôš | uh-hahsh-vay-ROHSH |
| after | מִקֵּץ֩ | miqqēṣ | mee-KAYTS |
| that she had been | הֱי֨וֹת | hĕyôt | hay-YOTE |
| twelve | לָ֜הּ | lāh | la |
| כְּדָ֤ת | kĕdāt | keh-DAHT | |
| months, | הַנָּשִׁים֙ | hannāšîm | ha-na-SHEEM |
| according to the manner | שְׁנֵ֣ים | šĕnêm | sheh-NAME |
| of the women, | עָשָׂ֣ר | ʿāśār | ah-SAHR |
| (for | חֹ֔דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| so | כִּ֛י | kî | kee |
| were the days | כֵּ֥ן | kēn | kane |
| of their purifications | יִמְלְא֖וּ | yimlĕʾû | yeem-leh-OO |
| accomplished, | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| to wit, six | מְרֽוּקֵיהֶ֑ן | mĕrûqêhen | meh-roo-kay-HEN |
| months | שִׁשָּׁ֤ה | šiššâ | shee-SHA |
| with oil | חֳדָשִׁים֙ | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
| of myrrh, | בְּשֶׁ֣מֶן | bĕšemen | beh-SHEH-men |
| and six | הַמֹּ֔ר | hammōr | ha-MORE |
| months | וְשִׁשָּׁ֤ה | wĕšiššâ | veh-shee-SHA |
| with sweet odours, | חֳדָשִׁים֙ | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
| and with other things for the purifying | בַּבְּשָׂמִ֔ים | babbĕśāmîm | ba-beh-sa-MEEM |
| of the women;) | וּבְתַמְרוּקֵ֖י | ûbĕtamrûqê | oo-veh-tahm-roo-KAY |
| הַנָּשִֽׁים׃ | hannāšîm | ha-na-SHEEM |