நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,
ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,
யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.
யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.
| Go, | לֵךְ֩ | lēk | lake |
| gather together | כְּנ֨וֹס | kĕnôs | keh-NOSE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the Jews | הַיְּהוּדִ֜ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| that are present | הַֽנִּמְצְאִ֣ים | hannimṣĕʾîm | ha-neem-tseh-EEM |
| in Shushan, | בְּשׁוּשָׁ֗ן | bĕšûšān | beh-shoo-SHAHN |
| and fast | וְצ֣וּמוּ | wĕṣûmû | veh-TSOO-moo |
| ye for | עָ֠לַי | ʿālay | AH-lai |
| me, and neither | וְאַל | wĕʾal | veh-AL |
| eat | תֹּֽאכְל֨וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| nor | וְאַל | wĕʾal | veh-AL |
| drink | תִּשְׁתּ֜וּ | tištû | teesh-TOO |
| three | שְׁלֹ֤שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| days, | יָמִים֙ | yāmîm | ya-MEEM |
| night | לַ֣יְלָה | laylâ | LA-la |
| or day: | וָי֔וֹם | wāyôm | va-YOME |
| I | גַּם | gam | ɡahm |
| also | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| and my maidens | וְנַֽעֲרֹתַ֖י | wĕnaʿărōtay | veh-na-uh-roh-TAI |
| will fast | אָצ֣וּם | ʾāṣûm | ah-TSOOM |
| likewise; | כֵּ֑ן | kēn | kane |
| and so | וּבְכֵ֞ן | ûbĕkēn | oo-veh-HANE |
| will I go in | אָב֤וֹא | ʾābôʾ | ah-VOH |
| unto | אֶל | ʾel | el |
| the king, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| is not | לֹֽא | lōʾ | loh |
| according to the law: | כַדָּ֔ת | kaddāt | ha-DAHT |
| and if | וְכַֽאֲשֶׁ֥ר | wĕkaʾăšer | veh-ha-uh-SHER |
| I perish, | אָבַ֖דְתִּי | ʾābadtî | ah-VAHD-tee |
| I perish. | אָבָֽדְתִּי׃ | ʾābādĕttî | ah-VA-deh-tee |