யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
| To confirm | לְקַיֵּ֡ם | lĕqayyēm | leh-ka-YAME |
| אֵת | ʾēt | ate | |
| these | יְמֵי֩ | yĕmēy | yeh-MAY |
| days | הַפֻּרִ֨ים | happurîm | ha-poo-REEM |
| of Purim | הָאֵ֜לֶּה | hāʾēlle | ha-A-leh |
| in their times | בִּזְמַנֵּיהֶ֗ם | bizmannêhem | beez-ma-nay-HEM |
| appointed, according as | כַּֽאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
| Mordecai | קִיַּ֨ם | qiyyam | kee-YAHM |
| the Jew | עֲלֵיהֶ֜ם | ʿălêhem | uh-lay-HEM |
| and Esther | מָרְדֳּכַ֤י | mordŏkay | more-doh-HAI |
| the queen | הַיְּהוּדִי֙ | hayyĕhûdiy | ha-yeh-hoo-DEE |
| had enjoined | וְאֶסְתֵּ֣ר | wĕʾestēr | veh-es-TARE |
| הַמַּלְכָּ֔ה | hammalkâ | ha-mahl-KA | |
| them, and as | וְכַֽאֲשֶׁ֛ר | wĕkaʾăšer | veh-ha-uh-SHER |
| they had decreed | קִיְּמ֥וּ | qiyyĕmû | kee-yeh-MOO |
| for | עַל | ʿal | al |
| themselves | נַפְשָׁ֖ם | napšām | nahf-SHAHM |
| and for | וְעַל | wĕʿal | veh-AL |
| their seed, | זַרְעָ֑ם | zarʿām | zahr-AM |
| the matters | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of the fastings | הַצֹּמ֖וֹת | haṣṣōmôt | ha-tsoh-MOTE |
| and their cry. | וְזַֽעֲקָתָֽם׃ | wĕzaʿăqātām | veh-ZA-uh-ka-TAHM |