தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
| And when Moses' | וַיַּרְא֙ | wayyar | va-yahr |
| father in law | חֹתֵ֣ן | ḥōtēn | hoh-TANE |
| saw | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| אֵ֛ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he | ה֥וּא | hûʾ | hoo |
| did | עֹשֶׂ֖ה | ʿōśe | oh-SEH |
| to the people, | לָעָ֑ם | lāʿām | la-AM |
| he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| What | מָֽה | mâ | ma |
| is this | הַדָּבָ֤ר | haddābār | ha-da-VAHR |
| thing | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| thou | אַתָּ֤ה | ʾattâ | ah-TA |
| doest | עֹשֶׂה֙ | ʿōśeh | oh-SEH |
| to the people? | לָעָ֔ם | lāʿām | la-AM |
| why | מַדּ֗וּעַ | maddûaʿ | MA-doo-ah |
| sittest | אַתָּ֤ה | ʾattâ | ah-TA |
| thou | יוֹשֵׁב֙ | yôšēb | yoh-SHAVE |
| thyself alone, | לְבַדֶּ֔ךָ | lĕbaddekā | leh-va-DEH-ha |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the people | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| stand | נִצָּ֥ב | niṣṣāb | nee-TSAHV |
| by | עָלֶ֖יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| thee from | מִן | min | meen |
| morning | בֹּ֥קֶר | bōqer | BOH-ker |
| unto | עַד | ʿad | ad |
| even? | עָֽרֶב׃ | ʿāreb | AH-rev |