தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
| And her two | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| sons; | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| of which | בָנֶ֑יהָ | bānêhā | va-NAY-ha |
| the name | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| of the one | שֵׁ֤ם | šēm | shame |
| was Gershom; | הָֽאֶחָד֙ | hāʾeḥād | ha-eh-HAHD |
| for | גֵּֽרְשֹׁ֔ם | gērĕšōm | ɡay-reh-SHOME |
| he said, | כִּ֣י | kî | kee |
| I have been | אָמַ֔ר | ʾāmar | ah-MAHR |
| an alien | גֵּ֣ר | gēr | ɡare |
| in a strange | הָיִ֔יתִי | hāyîtî | ha-YEE-tee |
| land: | בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| נָכְרִיָּֽה׃ | nokriyyâ | noke-ree-YA |