மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
| And Moses | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| God, | הָֽאֱלֹהִ֗ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| Behold, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| when I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| come | בָא֮ | bāʾ | va |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵל֒ | yiśrāʾēl | yees-ra-ALE |
| and shall say | וְאָֽמַרְתִּ֣י | wĕʾāmartî | veh-ah-mahr-TEE |
| unto them, The God | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| of your fathers | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| hath sent | אֲבֽוֹתֵיכֶ֖ם | ʾăbôtêkem | uh-voh-tay-HEM |
| me unto | שְׁלָחַ֣נִי | šĕlāḥanî | sheh-la-HA-nee |
| you; and they shall say | אֲלֵיכֶ֑ם | ʾălêkem | uh-lay-HEM |
| to me, What | וְאָֽמְרוּ | wĕʾāmĕrû | veh-AH-meh-roo |
| is his name? | לִ֣י | lî | lee |
| what | מַה | ma | ma |
| shall I say | שְּׁמ֔וֹ | šĕmô | sheh-MOH |
| unto | מָ֥ה | mâ | ma |
| them? | אֹמַ֖ר | ʾōmar | oh-MAHR |
| אֲלֵהֶֽם׃ | ʾălēhem | uh-lay-HEM |