ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
| And the Lord | וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE |
| said | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| Depart, | לֵ֣ךְ | lēk | lake |
| and go up | עֲלֵ֣ה | ʿălē | uh-LAY |
| hence, | מִזֶּ֔ה | mizze | mee-ZEH |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| and the people | וְהָעָ֔ם | wĕhāʿām | veh-ha-AM |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou hast brought up | הֶֽעֱלִ֖יתָ | heʿĕlîtā | heh-ay-LEE-ta |
| out of the land | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| of Egypt, | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| unto | אֶל | ʾel | el |
| the land | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| I sware | נִ֠שְׁבַּעְתִּי | nišbaʿtî | NEESH-ba-tee |
| unto Abraham, | לְאַבְרָהָ֨ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| to Isaac, | לְיִצְחָ֤ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
| and to Jacob, | וּֽלְיַעֲקֹב֙ | ûlĕyaʿăqōb | oo-leh-ya-uh-KOVE |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Unto thy seed | לְזַרְעֲךָ֖ | lĕzarʿăkā | leh-zahr-uh-HA |
| will I give | אֶתְּנֶֽנָּה׃ | ʾettĕnennâ | eh-teh-NEH-na |