கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
| And it came to pass, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| as Moses | כְּבֹ֤א | kĕbōʾ | keh-VOH |
| entered into | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| the tabernacle, | הָאֹ֔הֱלָה | hāʾōhĕlâ | ha-OH-hay-la |
| the cloudy | יֵרֵד֙ | yērēd | yay-RADE |
| pillar | עַמּ֣וּד | ʿammûd | AH-mood |
| descended, | הֶֽעָנָ֔ן | heʿānān | heh-ah-NAHN |
| and stood | וְעָמַ֖ד | wĕʿāmad | veh-ah-MAHD |
| at the door | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| of the tabernacle, | הָאֹ֑הֶל | hāʾōhel | ha-OH-hel |
| and the Lord talked | וְדִבֶּ֖ר | wĕdibber | veh-dee-BER |
| with | עִם | ʿim | eem |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |