முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
| As the appearance | כְּמַרְאֵ֣ה | kĕmarʾē | keh-mahr-A |
| of the bow | הַקֶּ֡שֶׁת | haqqešet | ha-KEH-shet |
| that | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| is | יִֽהְיֶ֨ה | yihĕye | yee-heh-YEH |
| in the cloud | בֶעָנָ֜ן | beʿānān | veh-ah-NAHN |
| in the day | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| of rain, | הַגֶּ֗שֶׁם | haggešem | ha-ɡEH-shem |
| so | כֵּ֣ן | kēn | kane |
| was the appearance | מַרְאֵ֤ה | marʾē | mahr-A |
| of the brightness | הַנֹּ֙גַהּ֙ | hannōgah | ha-NOH-ɡA |
| round about. | סָבִ֔יב | sābîb | sa-VEEV |
| This | ה֕וּא | hûʾ | hoo |
| was the appearance | מַרְאֵ֖ה | marʾē | mahr-A |
| of the likeness | דְּמ֣וּת | dĕmût | deh-MOOT |
| of the glory | כְּבוֹד | kĕbôd | keh-VODE |
| of the Lord. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| And when I saw | וָֽאֶרְאֶה֙ | wāʾerʾeh | va-er-EH |
| it, I fell | וָאֶפֹּ֣ל | wāʾeppōl | va-eh-POLE |
| upon | עַל | ʿal | al |
| my face, | פָּנַ֔י | pānay | pa-NAI |
| and I heard | וָאֶשְׁמַ֖ע | wāʾešmaʿ | va-esh-MA |
| a voice | ק֥וֹל | qôl | kole |
| of one that spake. | מְדַבֵּֽר׃ | mĕdabbēr | meh-da-BARE |