மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்.
அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?
ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.
| Or | א֛וֹ | ʾô | oh |
| if I bring | חֶ֥רֶב | ḥereb | HEH-rev |
| a sword | אָבִ֖יא | ʾābîʾ | ah-VEE |
| upon | עַל | ʿal | al |
| that | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| land, | הַהִ֑יא | hahîʾ | ha-HEE |
| and say, | וְאָמַרְתִּ֗י | wĕʾāmartî | veh-ah-mahr-TEE |
| Sword, | חֶ֚רֶב | ḥereb | HEH-rev |
| go through | תַּעֲבֹ֣ר | taʿăbōr | ta-uh-VORE |
| the land; | בָּאָ֔רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| so that I cut off | וְהִכְרַתִּ֥י | wĕhikrattî | veh-heek-ra-TEE |
| man | מִמֶּ֖נָּה | mimmennâ | mee-MEH-na |
| and beast | אָדָ֥ם | ʾādām | ah-DAHM |
| from | וּבְהֵמָֽה׃ | ûbĕhēmâ | oo-veh-hay-MA |