உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.
பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| take up | שָׂ֤א | śāʾ | sa |
| a lamentation | קִינָה֙ | qînāh | kee-NA |
| for | עַל | ʿal | al |
| Pharaoh | פַּרְעֹ֣ה | parʿō | pahr-OH |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| and say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| him, Thou art like | כְּפִ֥יר | kĕpîr | keh-FEER |
| a young lion | גּוֹיִ֖ם | gôyim | ɡoh-YEEM |
| of the nations, | נִדְמֵ֑יתָ | nidmêtā | need-MAY-ta |
| and thou | וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA |
| art as a whale | כַּתַּנִּ֣ים | kattannîm | ka-ta-NEEM |
| in the seas: | בַּיַּמִּ֔ים | bayyammîm | ba-ya-MEEM |
| and thou camest forth | וַתָּ֣גַח | wattāgaḥ | va-TA-ɡahk |
| with thy rivers, | בְּנַהֲרוֹתֶ֗יךָ | bĕnahărôtêkā | beh-na-huh-roh-TAY-ha |
| and troubledst | וַתִּדְלַח | wattidlaḥ | va-teed-LAHK |
| the waters | מַ֙יִם֙ | mayim | MA-YEEM |
| with thy feet, | בְּרַגְלֶ֔יךָ | bĕraglêkā | beh-rahɡ-LAY-ha |
| and fouledst | וַתִּרְפֹּ֖ס | wattirpōs | va-teer-POSE |
| their rivers. | נַהֲרוֹתָֽם׃ | nahărôtām | na-huh-roh-TAHM |