மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், தாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,
| Therefore, thou | וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA |
| son | בֶן | ben | ven |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| say | אֱמֹ֤ר | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of thy people, | עַמְּךָ֙ | ʿammĕkā | ah-meh-HA |
| The righteousness | צִדְקַ֣ת | ṣidqat | tseed-KAHT |
| of the righteous | הַצַּדִּ֗יק | haṣṣaddîq | ha-tsa-DEEK |
| shall not | לֹ֤א | lōʾ | loh |
| deliver | תַצִּילֶ֙נּוּ֙ | taṣṣîlennû | ta-tsee-LEH-NOO |
| him in the day | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| of his transgression: | פִּשְׁע֔וֹ | pišʿô | peesh-OH |
| as for the wickedness | וְרִשְׁעַ֤ת | wĕrišʿat | veh-reesh-AT |
| of the wicked, | הָֽרָשָׁע֙ | hārāšāʿ | ha-ra-SHA |
| he shall not | לֹֽא | lōʾ | loh |
| fall | יִכָּ֣שֶׁל | yikkāšel | yee-KA-shel |
| thereby in the day | בָּ֔הּ | bāh | ba |
| that he turneth | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
| from his wickedness; | שׁוּב֣וֹ | šûbô | shoo-VOH |
| neither | מֵֽרִשְׁע֑וֹ | mērišʿô | may-reesh-OH |
| shall the righteous | וְצַדִּ֗יק | wĕṣaddîq | veh-tsa-DEEK |
| be able | לֹ֥א | lōʾ | loh |
| to live | יוּכַ֛ל | yûkal | yoo-HAHL |
| for his righteousness in the day | לִֽחְי֥וֹת | liḥĕyôt | lee-heh-YOTE |
| that he sinneth. | בָּ֖הּ | bāh | ba |
| בְּי֥וֹם | bĕyôm | beh-YOME | |
| חֲטֹאתֽוֹ׃ | ḥăṭōʾtô | huh-toh-TOH |