நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
| If the wicked | חֲבֹ֨ל | ḥăbōl | huh-VOLE |
| restore | יָשִׁ֤יב | yāšîb | ya-SHEEV |
| the pledge, | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| give again | גְּזֵלָ֣ה | gĕzēlâ | ɡeh-zay-LA |
| that he had robbed, | יְשַׁלֵּ֔ם | yĕšallēm | yeh-sha-LAME |
| walk | בְּחֻקּ֤וֹת | bĕḥuqqôt | beh-HOO-kote |
| in the statutes | הַֽחַיִּים֙ | haḥayyîm | ha-ha-YEEM |
| of life, | הָלַ֔ךְ | hālak | ha-LAHK |
| without | לְבִלְתִּ֖י | lĕbiltî | leh-veel-TEE |
| committing | עֲשׂ֣וֹת | ʿăśôt | uh-SOTE |
| iniquity; | עָ֑וֶל | ʿāwel | AH-vel |
| he shall surely | חָי֥וֹ | ḥāyô | ha-YOH |
| live, | יִֽחְיֶ֖ה | yiḥĕye | yee-heh-YEH |
| he shall not | לֹ֥א | lōʾ | loh |
| die. | יָמֽוּת׃ | yāmût | ya-MOOT |