எக்காளத்தின் சத்தத்தக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும் அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
| When I say | בְּאָמְרִ֣י | bĕʾomrî | beh-ome-REE |
| unto the wicked, | לָרָשָׁ֗ע | lārāšāʿ | la-ra-SHA |
| O wicked | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| man, thou shalt surely | מ֣וֹת | môt | mote |
| die; | תָּמ֔וּת | tāmût | ta-MOOT |
| if thou dost not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| speak | דִבַּ֔רְתָּ | dibbartā | dee-BAHR-ta |
| to warn | לְהַזְהִ֥יר | lĕhazhîr | leh-hahz-HEER |
| the wicked | רָשָׁ֖ע | rāšāʿ | ra-SHA |
| from his way, | מִדַּרְכּ֑וֹ | middarkô | mee-dahr-KOH |
| that | ה֤וּא | hûʾ | hoo |
| wicked | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| man shall die | בַּעֲוֺנ֣וֹ | baʿăwōnô | ba-uh-voh-NOH |
| in his iniquity; | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
| but his blood | וְדָמ֖וֹ | wĕdāmô | veh-da-MOH |
| will I require | מִיָּדְךָ֥ | miyyodkā | mee-yode-HA |
| at thine hand. | אֲבַקֵּֽשׁ׃ | ʾăbaqqēš | uh-va-KAYSH |