மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.
நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.
ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,
நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
| And the tree | וְנָתַן֩ | wĕnātan | veh-na-TAHN |
| of the field | עֵ֨ץ | ʿēṣ | ayts |
| shall yield | הַשָּׂדֶ֜ה | haśśāde | ha-sa-DEH |
| אֶת | ʾet | et | |
| her fruit, | פִּרְי֗וֹ | piryô | peer-YOH |
| and the earth | וְהָאָ֙רֶץ֙ | wĕhāʾāreṣ | veh-ha-AH-RETS |
| shall yield | תִּתֵּ֣ן | tittēn | tee-TANE |
| her increase, | יְבוּלָ֔הּ | yĕbûlāh | yeh-voo-LA |
| and they shall be | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| safe | עַל | ʿal | al |
| in | אַדְמָתָ֖ם | ʾadmātām | ad-ma-TAHM |
| their land, | לָבֶ֑טַח | lābeṭaḥ | la-VEH-tahk |
| and shall know | וְֽיָדְע֞וּ | wĕyodʿû | veh-yode-OO |
| that | כִּי | kî | kee |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| am the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| when I have broken | בְּשִׁבְרִי֙ | bĕšibriy | beh-sheev-REE |
| אֶת | ʾet | et | |
| the bands | מֹט֣וֹת | mōṭôt | moh-TOTE |
| of their yoke, | עֻלָּ֔ם | ʿullām | oo-LAHM |
| and delivered | וְהִ֨צַּלְתִּ֔ים | wĕhiṣṣaltîm | veh-HEE-tsahl-TEEM |
| them out of the hand | מִיַּ֖ד | miyyad | mee-YAHD |
| of those that served | הָעֹבְדִ֥ים | hāʿōbĕdîm | ha-oh-veh-DEEM |
| themselves of them. | בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |