மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.
இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
| Thus will I make | וְנָֽתַתִּי֙ | wĕnātattiy | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| mount | הַ֣ר | har | hahr |
| Seir | שֵׂעִ֔יר | śēʿîr | say-EER |
| most | לְשִֽׁמְמָ֖ה | lĕšimĕmâ | leh-shee-meh-MA |
| desolate, | וּשְׁמָמָ֑ה | ûšĕmāmâ | oo-sheh-ma-MA |
| and cut off | וְהִכְרַתִּ֥י | wĕhikrattî | veh-heek-ra-TEE |
| from | מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it him that passeth out | עֹבֵ֥ר | ʿōbēr | oh-VARE |
| and him that returneth. | וָשָֽׁב׃ | wāšāb | va-SHAHV |