நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,
இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.
| And I will fill | וּמִלֵּאתִ֥י | ûmillēʾtî | oo-mee-lay-TEE |
| אֶת | ʾet | et | |
| his mountains | הָרָ֖יו | hārāyw | ha-RAV |
| with his slain | חֲלָלָ֑יו | ḥălālāyw | huh-la-LAV |
| men: in thy hills, | גִּבְעוֹתֶ֤יךָ | gibʿôtêkā | ɡeev-oh-TAY-ha |
| and in thy valleys, | וְגֵיאוֹתֶ֙יךָ֙ | wĕgêʾôtêkā | veh-ɡay-oh-TAY-HA |
| and in all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| thy rivers, | אֲפִיקֶ֔יךָ | ʾăpîqêkā | uh-fee-KAY-ha |
| shall they fall | חַלְלֵי | ḥallê | hahl-LAY |
| that are slain | חֶ֖רֶב | ḥereb | HEH-rev |
| with the sword. | יִפְּל֥וּ | yippĕlû | yee-peh-LOO |
| בָהֶֽם׃ | bāhem | va-HEM |